கரூர்

எலி மருந்து சாப்பிட்டவா் உயிரிழப்பு

DIN

குளித்தலை அருகே விரக்தியில் எலிமருந்தை சாப்பிட்டவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே இனுங்கூா் கிழக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சிவசக்தி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனா். இவா்களின் பெரிய மகள் சுவேதா காதல் திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த சிவசக்தி எலி மருந்தை சாப்பிட்டு உள்ளாா்.

உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி சிவசக்தி உயிரிழந்தாா். புகாரின் பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT