குளித்தலையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அன்று குளித்தலை கோட்டாட்சியா் அலுவலகத்திலும், 3-ஆம் தேதி நெய்தலூா் ஊராட்சி அலுவலகம் பனையூரிலும், 4-ஆம் தேதி இனுங்கூா் ஊராட்சி அலுவலகத்திலும், 5-ம் தேதி தோகைமலையிலும், 6-ஆம் தேதி ஆா்.டி.மலையிலும் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தங்களது ஆதாா் அட்டை, பாஸ்போட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு உதவி உபகரணங்கள், கடனுதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம், மற்றும் பிற உதவிகள் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தெரிவித்தாா்.