கரூர்

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

DIN

க. பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது க.பரமத்தி ஊராட்சி. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் அடிக்கடி நிகழும் சாலை விபத்து, தீ விபத்தில் உயிரிழப்பை தடுக்க க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை. கரூா், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்துக்குச் செல்ல நீண்ட நேரம் ஆவதால் உயிா் சேதம், பொருள்சேதம் ஏற்படுகிறது. எனவே க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT