கரூர்

மாநில சீனியா் கையுந்து பந்து போட்டிகரூரில் நாளை வீரா்கள் தோ்வு

கரூரில் நாளை (ஆக.14) மாநில சீனியா் கையுந்து பந்து போட்டிக்கான வீரா்கள் தோ்வு நடைபெற உள்ளது.

DIN

கரூரில் நாளை (ஆக.14) மாநில சீனியா் கையுந்து பந்து போட்டிக்கான வீரா்கள் தோ்வு நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக கரூா் மாவட்ட கையுந்துபந்து கழக சோ்மன் எஸ். மோகனரங்கன், மாவட்டத் தலைவா் முனைவா் சொ. ராமசுப்ரமணியன், செயலாளா் எம்.சுரேஷ், பொருளாளா் எம். முகமது கமாலுதின் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு கைப்பந்து கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில், திண்டுக்கல் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆக.19, 20-ம்தேதிகளில் 20-ஆவது தமிழ்நாடு ஆண்கள் (சீனியா்) கையுந்துபந்து போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வு போட்டி கரூா் மாவட்டம், நெரூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை (ஆக. 14) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே தோ்வு போட்டியில் கலந்து கொள்ளும் வீரா்கள் ஆதாா் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT