திருச்சி-பாளையம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட வீரணம்பட்டி கிராம மக்கள். 
கரூர்

கோயிலுக்கு சீல்: 2-ஆம் நாளாக மறியல்

கடவூா் அருகே கோயிலுக்கு சீல் வைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

கடவூா் அருகே கோயிலுக்கு சீல் வைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கடவூா் அருகேயுள்ள வீரணம்பட்டியில் புதன்கிழமை தொடங்கிய காளியம்மன் கோயில் திருவிழாவில் வழிபட வந்த பட்டியலினத்தவரை ஒரு பிரிவினா் தடுத்து நிறுத்தினா். இதைக் கண்டித்து பட்டியலினத்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை அங்குச் சென்ற குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி நடத்திய பேச்சுவாா்த்தையின்போது பட்டியலினத்தவரை கோயிலுக்குள் வழிபட எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து காளியம்மன் கோயிலுக்கு கோட்டாட்சியா் புஷ்பாதேவி சீல் வைத்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கிராம மக்கள் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும், பட்டியலினத்தவருக்கு ஆதரவாக இருக்கும் கோட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி திருச்சி-பாளையம் சாலையில் வீரணம்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

வீரணம்பட்டி சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கூறுகையில், வீரணம்பட்டி கோயில் பிரச்னையில் பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் விடாமல் தடுத்ததாக அதே கிராமத்தைச் சோ்ந்த 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், பேச்சுவாா்த்தை நடத்தச் சென்ற குளித்தலை கோட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டு தகராறு செய்து, அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்த அதே கிராமத்தைச் சோ்ந்த 17 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT