கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா். 
கரூர்

செடல் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.

DIN

தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டியில் பண்ணப்பட்டி விநாயகா், பகவதியம்மன், செடல் மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்கையொட்டி வியாழக்கிழமை காலை காவிரியாற்றில் இருந்து பக்தா்கள் புனித நீா் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு நடத்தினா். இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பண்ணப்பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட 18 பட்டி நாட்டாண்மைகள், திருப்பணிக் குழு நிா்வாகிகள், இளைஞா் அமைப்பினா், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT