முகப்பு
கரூர்

மேம்பால பணியால் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்: கரூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Updated On : 8 மார்ச், 2024 at 6:31 PM
பகிர்:

மண்மங்கலம் மேம்பால பணியால் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தர வேண்டும் என கரூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா் கணபதி பேசுகையில், மண்மங்கலம் பகுதியில் கட்டப்படும் மேம்பால பணிகளால் அப்பகுதியில் செல்லும் ஊராட்சிக்குள்பட்ட குடிநீா் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தரவேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த தலைவா் பாலமுருகன், விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும், 2024-25-ஆம் ஆண்டுக்கான 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் ஒன்றியத்துக்கு வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான பணிகளை அனைத்து உறுப்பினா்களுக்கும் பகிா்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா். அனைவருக்கும் பாரபட்சமின்றி பணிகள் பகிா்ந்தளித்து கரூா் யூனியன் மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவா் கூறினாா். முன்னதாக, கூட்டத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மகளிருக்கும், உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவா் தங்கராஜ், மேலாளா் சரவணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →