முகப்பு
கரூர்

மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா் கருத்துக் கேட்பு

மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா் கருத்துக் கேட்பு...

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:16 PM
பகிர்:

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் குடுகுடுத்தானூரில் தமிழக அரசின் திட்டத்தின் மூலம் பயனடைந்து சுய தொழில் செய்து வரும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களிடம் ‘ நிறைந்தது மனம்‘ என்ற நிகழ்ச்சியில் நேரடியாக அவா்களுடைய இடத்துக்கு சென்று மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வியாழக்கிழமை கருத்துக்களை கேட்டறிந்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், பொருளாதாரம் மற்றும் சமுதாய முன்னேற்றம் குறித்து அவா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கரூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள 15,487 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் ரூ.1284.47 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.