கரூர்

கரூா் சம்பவம்: கரூா் மருத்துவா், காயமடைந்தோரிடம் விசாரணை

கரூா் துயர சம்பவத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த கரூா் மருத்துவா் மற்றும் நெரிசலில் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

கரூா் துயர சம்பவத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த கரூா் மருத்துவா் மற்றும் நெரிசலில் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் கரூா் ஆட்சியா், காவல் அதிகாரிகள், நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்கள் ஆகியோரின் உறவினா்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, நெரிசலில் உயிரிழந்தோரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த தூத்துக்குடி, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை மாவட்ட மருத்துவா்களிடம் கடந்த சில நாள்களாக விசாரித்தனா்.

இந்நிலையில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா் ஒருவா் மற்றும் நெரிசல் சம்பவத்தின்போது காயமடைந்த 5 போ் ஆகியோா் சிபிஐ அதிகாரிகள் முன் புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT