கரூர்

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,526 வழக்குகளில் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,526 வழக்குகளுக்கு ரூ. 13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

Syndication

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,526 வழக்குகளுக்கு ரூ. 13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கரூரில் 5 அமா்வுகளும், குளித்தலையில் 2 அமா்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமா்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளில் 1,624 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,526 வழக்குகளுக்கு ரூ.13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

முன்னதாக கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் தொடக்கிவைத்தாா். இதில் அனைத்து நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளா்கள், சட்டத் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் அனுராதா செய்தாா்.

கவனம் ஈர்க்கும் திருவண்ணாமலை! மலை நகரில் மாலை சந்திப்போம்: முதல்வர்!

மெஸ்ஸி நிகழ்ச்சி! மமதா பானர்ஜி மீது கைது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!

பிக் பாஸ் 9: திடீர் ட்விஸ்ட்! இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி! நாளை முதல் ரூ. 5000 அபராதம்!

அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி; 9 பேர் கவலைக்கிடம்!

SCROLL FOR NEXT