பெரம்பலூர்

மின்னல் பாய்ந்து பெண் பலி

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மனைவி செல்வி (45). இவருக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தனது வயலுக்கு செல்வி விவசாய வேலைக்காகச் சென்றிருந்தார். வேப்பந்தட்டை வட்டாரத்தில் இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. அப்போது, மரத்தின் அடியில் செல்வி மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தபோது, மின்னல் பாய்ந்ததில் செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT