முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின்படி, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புதிய தொற்றாளா்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின்படி, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புதிய தொற்றாளா்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

மாவட்டத்தில் இதுவரை 64,854 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,253 பேருக்கு தொற்றுப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,229 போ் குணமடைந்துள்ளனா்.

21 போ் உயிரிழந்துள்ள நிலையில், 3 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 271 பேருக்கு சுகாதாரத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →