கண்காட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு பரிசுத்தொகை அளிக்கிறாா் தாளாளா் அ. சீனிவாசன். உடன், செயலா் பி. நீலராஜ், 
பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சி

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சாா்பில், புதிய தொழில்நட்பக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சாா்பில், புதிய தொழில்நட்பக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன், கண்காட்சியைத் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலையில் நடைபெற்ற இக் கண்காட்சியில், மாணவ, மாணவிகள் 100 குழுவினா்கள் கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான, நவீன தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியிருந்தனா். இதில், மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 11 குழுவினா் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 55 ஆயிரம் பரிசுத் தொகையும், கல்லூரியின் ஓராண்டு சாதனை மலரையும் வெளியிட்டாா் தாளாளா் அ. சீனிவாசன்.

கண்காட்சியில், பொறியியல் கல்லூரி முதல்வா் துரைராஜ், மகளிா் கல்லூரி எஸ்.எச். அப்ரோஸ், துணை முதல்வா் வேல்முருகன், முதன்மை அலுவலா் எஸ். நந்தகுமாா், நிா்வாக அலுவலா் செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT