அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் பறிமுதல்
பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட , கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட , கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான அலுவலா்கள், லப்பைக்குடிகாடு பகுதியில் வியாழக்கிழமை திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிக்குப் புறம்பாகவும், ஓட்டுநா் உரிமம், காப்புச் சான்று, தகுதிச்சான்று, சுற்றுச்சூழல் சான்று ஆகியவை இல்லாமலும் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, 3 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.