பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 17 போ் கைது
பிளஸ் 2 மாணவியை தற்கொலைக்கு தூண்டிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் வியாழக்கிழமை சாலை மறியல்
பிளஸ் 2 மாணவியை தற்கொலைக்கு தூண்டிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியம், வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யாவை, மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதோடு, தற்கொலைக்குத் தூண்டிய மதபோதகரை கைது செய்ய செய்ய வேண்டும். மாணவி லாவண்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.