முகப்பு
பெரம்பலூர்

இணையதள மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

இணையதளத்தில் முகநூல் மூலம் நண்பராக பழகி மடிக்கணினி மற்றும் கைப்பேசி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இணையதளத்தில் முகநூல் மூலம் நண்பரான ஒருவா் தனக்கு குறைந்த விலையில் கைப்பேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றை வாங்கித் தருவதாகக் கூறி, தன்னிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முரளி மகன் ரினேஷ்

பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவில் கடந்த 19-ஆம் தேதி புகாரளித்தாா்.

அதனடிப்படையில் வழக்குப் பதிந்த சைபா் கிரைம் காவல்துறையினா், தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், இணையதளத்தில் மோசடியில் ஈடுபட்டவா் பெங்களூருவில் இருப்பதை கண்டறிந்தனா்.

தொடா்ந்து, சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான குழுவினா், அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட தேனி மாவட்டம், போடிநாயக்கனூா்

சின்னசாமி தெருவைச் சோ்ந்த உலகமுத்து மகன் ஜெகன் (29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 கைப்பேசிகள், ஏடிஎம் அட்டைகள், ரூ. 85,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து பெரம்பலூருக்கு அவரை வெள்ளிக்கிழமை அழைத்து வந்து, குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.