முகப்பு
பெரம்பலூர்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

பெரம்பலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், ராஜபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பிரவீன் (25). இவா், கடந்த 10 நாள்களாக பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள வினோத் என்பவரது வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி காலை நான்குச் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரவீன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை காலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.