பெரம்பலூர்

மணல் திருட்டில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான காவலா்கள், வேப்பூா் பிரிவு பாதை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து விசாரித்தனா். இதில், டிராக்டரில் வந்த நபா் நன்னை கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் தேவராஜ் என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேவராஜை கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு தேவராஜ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT