தனலட்சுமி அம்மையாரின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி அளிக்கும் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன். உடன், துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன், செயலா் பி. நீலராஜ். 
பெரம்பலூர்

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள்: எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, பெரம்பலூா்- துறையூா் சாலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாா் நினைவிடத்தில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பின்னா், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சீ. கதிரவன், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் நிவானி கதிரவன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT