புதுக்கோட்டை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை: புதுகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு

DIN


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ஆலங்குடி கலிபுல்லா நகரைச் சேர்ந்தவர் அசரப்அலி ( 68). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியைக் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
இதுகுறித்து சிறுமியின் தாயார், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் அசரப் அலியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். ராஜலெட்சுமி சனிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசரப் அலிக்கு ஆயுள் சிறை சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

SCROLL FOR NEXT