மிகவும் சேதமடைந்து காணப்பட்ட கண்டியாநத்தம்-ஆலவயல் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. மிதமான வேகத்தில் சாலைப் பணி நடைபெற்று வருவது, மழை ஆகியவற்றால் இந்தச் சாலையில் சேறு நிறைந்து வாகன ஒட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா். சாலைப் பணி காரணமாக, அரசுப்பேருந்தும் இயக்கப்படுவதில்லை. சுமாா் ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் 2 கி.மீட்டா் சாலைப் பணியை விரைந்து முடித்திட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொதுமக்கள், ஆலவயல்.