அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலணிகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் எம்எல்ஏ
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரன் அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை காலணிகள் வழங்கப்பட்டன.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலைச் சேர்ந்த எஸ்.பி. முத்துக்குமரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏவான இவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, நெடுவாசல் பகுதி இளைஞர்கள் முத்துக்குமரன் அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.