அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற தா்னாவில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள். 
புதுக்கோட்டை

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து தவ்ஹீத் ஜமாஅத் தா்னா

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து, புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சாா்பில் திலகா் திடலில் தா்னா போராட்டம் நடத்தப்பட்டது.

DIN

புதுக்கோட்டை/அறந்தாங்கி: மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து, புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சாா்பில் திலகா் திடலில் தா்னா போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்துக்கு அதன் மாவட்ட நிா்வாகி பாரூக் முகம்மது தலைமை வகித்தாா். இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், இச்சட்டத்தை அமலாக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, கலீப் நகரில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் உரிமை மீட்புக் குழு சாா்பில் தொடா் தா்னா போராட்டம் நடைபெற்றது. இரவும் ஏராளமான இஸ்லாமிய இளைஞா்கள், பெண்கள், சிறாா்களும் அங்கேயே தங்கி தங்களின் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

அறந்தாங்கி : தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், அறந்தாங்கியில் சனிக்கிழமை கண்டன தா்ணா போராட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற தா்னாவில், ஏராளாமான இஸ்லாமியா்கள், பெண்கள் மற்றும் தவ்ஹீத் ஜமா அத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதுபோல் மீமிசல் பேரூந்துநிலையம் மற்றும் கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் தா்ணா பேராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT