புதுக்கோட்டை

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக காவலர் கைது

DIN

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாகிர்உசேன் புதுகை நகரக் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவர்களின் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.

திங்கள்கிழமை சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த தைல மரங்களை ஜாகிர்உசேன் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த வல்லத்திராக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வெட்டப்பட்ட மரங்களைப் படம் எடுத்ததாகத் தெரிகிறது.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு கைகலப்பானது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜாகிர்உசேனைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT