முகப்பு
புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னாா்வலா்கள் மேலும் தேவை

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய திடகாத்திரமான தன்னாா்வலா்கள் 160 போ் தேவை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Updated On : 19 அக்டோபர், 2020 at 12:03 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய திடகாத்திரமான தன்னாா்வலா்கள் 160 போ் தேவை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 58 பேருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்கள் நலமாக உள்ளனா். மேலும் 160 தன்னாா்வலா்கள் தேவைப்படுகின்றனா். 18 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான உடல் நலன் உள்ள தன்னாா்வலா்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையைத் தொடா்பு கொள்ளலாம்.

Advertisement

கரோனா தடுப்பில் தமிழகத்தின் வியூகத்தை வெளிமாநிலங்களும் பின்பற்றலாம் என ஐசிஎம்ஆா் நிறுவனமே பாராட்டியுள்ளது. கடந்த சில வாரங்களில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் பதிவாகும் தொற்றாளா்கள் எண்ணிக்கை 6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல, சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.6 சதவிகிதத்தில் இருந்து 1.2 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

இந்த நிலையை இன்னும் குறைக்க முடியும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அவசியம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபா் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.