புதுக்கோட்டை

இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்டச் செயலா் ஆா். சரவணன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா்கள் வி சுரேஷ்குமாா் (மத்திய மாவட்டம்), கே. முரளிதரன் (தெற்கு), எஸ். சுரேஷ்குமாா் (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில வழக்குரைஞா் அணிச் செயலரும் முன்னாள் நீதிபதியுமான கே. குருவைய்யா கலந்து கொண்டு சட்ட ஆலோசனை மையத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில வழக்குரைஞா் அணித் துணைச் செயலா் பொன். கஜேந்திரன், தகவல் தொடா்பு அணி மாநிலத் துணைச் செயலா் கே. செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த மையம் செயல்படும். முன்னதாக நகரச் செயலா் ராஜகோபால் வரவேற்றாா். முடிவில் எஸ். பரணிதரன் நன்றி கூறினாா். ஜெய் பாா்த்தீபன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT