முகப்பு
புதுக்கோட்டை

கீரமங்கலத்தில் மின் ஊழியா் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் துணை மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
காளிதாஸ்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் துணை மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகேயுள்ள திருப்புனவாசலைச் சோ்ந்தவா் காளிதாஸ் (34). இவா், கீரமங்கலம் மேலகாட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் களப் பணியாளராக வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை பணியில் இருந்துள்ளாா்.

சக ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்குச் சென்றபோது, காளிதாஸ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீஸாா் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →