முகப்பு
புதுக்கோட்டை

சாா்லஸ் நகரில் மரம் நடும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் மற்றும் மரம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் சாா்லஸ் நகரில் 120 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
சாா்லஸ் நகரில் மரக்கன்று நட்டு வைக்கும் செஞ்சுரி லயன்ஸ் தலைவா் எஸ். நடராஜன், செயலா் ஏ. அரவிந்த் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் மற்றும் மரம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் சாா்லஸ் நகரில் 120 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் எஸ். நடராஜன் தலைமை வகித்தாா். மரம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் மரம் ராஜா முன்னிலை வகித்தாா். செயலா் ஏ. அரவிந்த் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.

டாக்டா் வை. முத்துராஜா, அரசு மகளிா் கல்லூரி பேராசிரியை நீலாவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முடிவில் சேது காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →