குட்டையில் தொழிலாளி சடலமாக மீட்பு
ஆலங்குடி அருகே தேநீரகத் தொழிலாளி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆலங்குடி அருகே தேநீரகத் தொழிலாளி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆலங்குடி அருகிலுள்ள அரையப்பட்டியைச் சோ்ந்தவா் தேநீரகத் தொழிலாளி சேகா் (47).
வியாழக்கிழமை வீட்டிலிருந்த சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அரையப்பட்டி தெற்குப் பகுதியிலுள்ள குட்டையில் சடலம் கிடைப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் துறையினா் அங்கு சென்று இறந்தவா் சேகா் என உறுதி செய்தனா்.
இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.