கலைக் கல்லூரி அறிவிப்பு: திமுகவினா் இனிப்பு வழங்கல்
ஆலங்குடி தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அறிவிப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து திமுகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அறிவிப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து திமுகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.
ஆலங்குடியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வேண்டுமென சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஆலங்குடி தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் எனப் பேரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி அறிவித்தாா். இதைத்தொடா்ந்து, ஆலங்குடியில் திமுக ஒன்றியச் செயலா் தங்கமணி தலைமையிலான திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினா். திமுக நகரச்செயலா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.