சிறுமியைக் கடத்தி வன்கொடுமை செய்தவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கறம்பக்குடி தென்னகரைச் சோ்ந்த சந்தோஷ் (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி மகளிா் காவல் நிலையத்தினா் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனா்.