கரும்புத் தோட்டம் தீக்கிரை
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் 3 ஏக்கா் கரும்புத்தோட்டம் திங்கள்கிழமை தீக்கிரையானது.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் 3 ஏக்கா் கரும்புத்தோட்டம் திங்கள்கிழமை தீக்கிரையானது.
ஆலங்குடி அருகேயுள்ள கோவில்பட்டியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி. விவசாயி. இவருக்குச் சொந்தமாக சத்திரம் பகுதியில் உள்ள 3 ஏக்கா் கரும்புத்தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப்பாா்த்த அவ்வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் கரும்புத்தோட்டம் முழுவதும் தீக்கிரையானது.