புதுக்கோட்டை

பிறந்து சில மணி நேரமே ஆனபெண் சிசு மீட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண்சிசுவை (படம்) வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கறம்பக்குடி அருகிலுள்ள பிலாவிடுதி பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில் குழந்தையின் அழுகுரல் வெள்ளிக்கிழமை கேட்டுள்ளது. இதையடுத்து அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்த போது, பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை யாரோ விட்டுச் சென்றது தெரிய வந்தது.

தகவலறிந்த கறம்பக்குடி வட்டாட்சியா் விசுவநாதன் நிகழ்விடம் சென்று, பெண் சிசுவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பின்னா்,

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்களிடம் சிசு ஒப்படைக்கப்பட்டது.

பெண் சிசுவை யாா் விட்டுச்சென்றது என்பது குறித்து கறம்பக்குடி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT