கறம்பக்குடியில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, மழையூரில் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு மணல் குவாரி அமைத்துத் தர வலியுறுத்தி, சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, மழையூரில் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு மணல் குவாரி அமைத்துத் தர வலியுறுத்தி, சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் நகரத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஸ்ரீதா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் வீரமுத்து உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா்.
தொடா்ந்து மணல் குவாரி அமைத்துத் தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.