650 பித்தளை பொங்கல் பானைகள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்ததாக 650 பித்தளை பொங்கல் பானையை சனிக்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்ததாக 650 பித்தளை பொங்கல் பானையை சனிக்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
இலுப்பூரில் இயங்கி வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் குடும்பத்தாருக்குச் சொந்தமான இலுப்பூா் மதா்தெரஸா கல்லூரியில் விராலிமலை தோ்தல் நடத்தும் அலுவலா் தண்டாயுதபாணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பொங்கல் பானை 650-ஐ தோ்தல் பறக்கும் படையினா் கைப்பற்றினா். இதனால் இலுப்பூா், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.