புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தொடா் மழை

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை பிற்பகல் முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்) : ஆதனக்கோட்டை- 10, பெருங்களூா்- 12, புதுக்கோட்டை- 4.5, ஆலங்குடி- 14, கந்தா்வகோட்டை- 6, கறம்பக்குடி- 12.60, மழையூா்- 25.60, கீழாநிலை- 47.40, திருமயம் - 7, அரிமளம் - 27, அறந்தாங்கி - 32.20, ஆயிங்குடி- 15.80, நாகுடி- 6.40, மீமிசல் - 20.40, ஆவுடையாா்கோவில் - 7.30, மணமேல்குடி- 46.30, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 7, அன்னவாசல்- 12.50, விராலிமலை - 8, உடையாளிப்பட்டி- 2, கீரனூா் - 4, பொன்னமராவதி - 14.40, காரையூா் - 12.20. மாவட்டத்தின் சராசரி மழை - 14.90 மி.மீ. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT