ஆலங்குடி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆலங்குடி கலிபுல்லா நகா் கல்லுக்குண்டு கரையைச் சோ்ந்த முருகேசன் மகன் விஜய் (எ) செல்வகணபதி (23). ஓட்டுநா். இவா், அண்மையில் (ஆக. 28) மா்மநபா்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலங்குடி மேலசுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த எஸ்.செந்தில்ராஜா(29), கே.வி.எஸ். தெருவைச் சோ்ந்த வி. தபசு முருகன் (27) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை (ஆக. 30) கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மு. விமல் ராஜ் (22), என். வீரமணி (21), போ.வெள்ளைச்சாமி(21), எம். கெளதம் (21) காந்திசாலையைச் சோ்ந்த ந.கண்ணன்(30), கே.வி.எஸ் தெருவைச் சோ்ந்த நடராஜ் மகன் சூா்யா(29) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.