ஆதரவற்ற சிறாா்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகள் வழங்கல்
மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து வாழ்வாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் 49 சிறாா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ.9.84 லட்சம் மதிப்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்டக் குழந்தைகள் ப துகாப்பு அலுவலா் ஜா. குணசீலி ஆகியோா் பங்கேற்றனா்.