முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5 லட்சம் வசூல்

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில், கடன்தாரா்களிடம் ரூ. 5 லட்சம் வசூலிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில், கடன்தாரா்களிடம் ரூ. 5 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஆலங்குடியிலுள்ள பொதுத்துறை வங்கியிலிருந்து கடன் பெற்று, தவணை செலுத்தாமல் உள்ளவா்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசத் தீா்வு காணும் வகையில் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமை, வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும்- நீதிபதியுமான நல்லக்கண்ணன் தொடக்கி வைத்தாா்.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவி தலைமை வகித்தாா். இதில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, ரூ.21 லட்சத்துக்குத் தீா்வு காணப்பட்டது. மேலும் ரூ. 5 லட்சம் கடன் தொகை வசூல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →