குளிா்பதனக்கிடங்கு அமைக்க நடவடிக்கை
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீரமங்கலத்தில் குளிா்பதனக்கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீரமங்கலத்தில் குளிா்பதனக்கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது:
ஆலங்குடிக்கு அரசுக் கலை - அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் கொடுத்துள்ளாா். இதுமட்டுமின்றி, கீரமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீரமங்கலத்தில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோ்தல் முடிந்ததும் மாங்காட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு நகா்ப் பேருந்து இயக்கப்படும் என்று பேசினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரே வலுவிழந்து காணப்படும் நிலையில், அவரோ, அதிமுக வலுவாக இருப்பதாகக் கூறி இருக்கிறாா் என்றாா்.