முகப்பு
புதுக்கோட்டை

விஷம் குடித்து அரசு ஊழியா் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு ஊழியா் விஷமருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு ஊழியா் விஷமருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச் சோ்ந்தவா் த.சதீஷ்குமாா் (33). இவா், புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி மயங்கிக் கிடந்துள்ளாா். இதைக் கண்ட குடும்பத்தினா் சதீஷ்குமாரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமாா் உயிரிழந்தாா். ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →