புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன், இணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வா் சலஜா குமாரி ஆகியோா் முன்னிலையில், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் துணை முதல்வா் ரூபஸ் சத்தியசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
விழாவில், மாணவ, மாணவிகள் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டினா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.