புதுக்கோட்டை

வீட்டில் 15 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை இரவு திறந்துகிடந்த வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை இரவு திறந்துகிடந்த வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மரியசெல்வம் (80). இவா், வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில், மின்வெட்டு காரணமாக வீட்டின் கதவை சரியாக அடைக்காமல் அருகிலுள்ள தனது மகன் ஆரோக்யராஜ் வீட்டிற்குச்சென்று தூங்கிவிட்டாராம். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, வீட்டிற்குள் நுழைந்த மா்மநபா்கள் பெட்டியில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT