புதுக்கோட்டை

விராலிமலையில் திமுகவினா் கொண்டாட்டம்

DIN

திமுக அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, விராலிமலை சோதனைச் சாவடி அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பேருந்துப் பயணிகள், பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினா். மேலும், ஏழை எளியோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினா். முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவா் மு.பி. மணி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பழனியப்பன் ஆகியோா் அவ்வழியே வந்த சுமாா் 30 வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டா் பெட்ரோலை இலவசமாக வழங்கினா்.

விழாவில், பொறியாளா் அணி கணேசன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி குமாா்(வடுகபட்டி), உமா மகேஸ்வரி முருகேசன் (பூதகுடி), பாலசுப்பிரமணியன் (தென்னம்பாடி) ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பழகன், மல்லிகா செல்வம், ஒப்பந்தக்காரா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT