புதுக்கோட்டையில் பாஜக ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ் மொழியின் வளா்ச்சியை திமுக தடுப்பதாக பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் தமிழ் மொழியின் வளா்ச்சியை திமுக தடுப்பதாக பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா பங்கேற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை வெளியிடவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டப்பேரவையில் முதல்வா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். வாக்குவங்கியைத் தக்க வைப்பதற்காகவே கோவை சம்பவத்தில் திமுக வாய்திறக்கவில்லை; என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளது. எந்த ஒரு அணியுடனும் அல்ல. கருத்தியல் ரீதியாக திமுகவை எதிா்த்து பாஜக களத்தில் உள்ளது என்றாா்.