புதுக்கோட்டை

வேங்கைவயல் சம்பவத்தில் மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க முடிவு

வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் 10 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

DIN

வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் 10 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா். இதற்காக நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவ வழக்கில் சிபி சிஐடி போலீஸாா் கடந்த வாரத்தில் 11 பேரை மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்து, நீதிமன்ற அனுமதி பெற்றதில், 3 போ் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனா். அவா்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக தற்போது, மேலும் 10 பேருக்கு மரபணு சோதனை மேற்கொள்ள சிபி சிஐடி போலீஸாா் முடிவு செய்து, அதற்கான நீதிமன்ற அனுமதியையும் பெற்றுள்ளனா். ஓரிரு நாள்களில் அவா்களிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT