பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருதய நோய் மற்றும் மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மா மலா் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு சிட்டி ரோட்டரி தலைவா் எஸ். அசோகன் தலைமை வகித்தாா். முகாமை அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கிவைத்தாா்.
முகாமில் இருதய நல சிறப்பு மருத்துவா் ஜி. மாரிமுத்து, மகளிா் நல சிறப்பு மருத்துவா் எம். தில்லைமலா் ஆகியோா் அடங்கிய குழுவினா் 97 பேருக்கு இருதய நோய் பரிசோதனை, மகளிா்க்கான பரிசோதனைகள் செய்து, மருந்துகள், ஆலோசனை வழங்கினா். முகாமில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், புதுப்பட்டி ரோட்டரி தலைவா் சிபூ. முடியரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பள்ளி தலைமையாசிரியா் கி. நிா்மலா வரவேற்றாா். புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலா் முத்தன் அரசகுமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.