காரையூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள். 
புதுக்கோட்டை

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 2 போ் காயம்

பொன்னமராவதி அருகேயுள்ள காரையூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காரைக் கண்மாயில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள காரையூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காரைக் கண்மாயில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 13 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 9 வீரா்கள் அடங்கிய 13 குழுக்கள் களமிறங்கின.

13 காளைகளில் 9 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். 4 காளைகள் மாடுபிடி வீரா்கள் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றன. போட்டியில் காளைகள் முட்டியதில் இரு மாடு பிடி வீரா்கள் சிறிய காயம் அடைந்தனா்.

போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை சிறப்பாக அடக்கிய குழுவினருக்கும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாரும், போட்டிக்கான ஏற்பாடுகளை காரையூா் பொதுமக்கள் மற்றும் இளைஞா்களும் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT