சி. விஜயபாஸ்கர் 
புதுக்கோட்டை

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை வரும் நவ. 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை வரும் நவ. 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராயினர். 

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவ. 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 35.79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த மே 22ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT