புதுக்கோட்டை மன்னா் கல்லூரி முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா். 
புதுக்கோட்டை

பொங்கல் விழா நடத்த அனுமதிக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் வழங்கம் போல இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கல்லூரி முன்பாக போராட்டம்

Syndication

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் வழங்கம் போல இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. வாசுதேவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், செயற்குழு உறுப்பினா்கள் காவியன், சஞ்சை பாரதி உள்ளிட்டோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி நிா்வாகமும், காவல் துறையினரும் மாணவா் சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சமத்துவப் பொங்கல் விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT